கதையை நன்கு படித்துவிட்டு நீதி வழங்குமாறு வேண்டுகிறேன்! வழங்கிய நீதி சரியா என்பதையும் சரிபார்த்து கொள்வோம்! ஒரு ஊரில் ஒரு அரசர் அந்தணர்கள் யாரும் பசியில் வாடக்கூடாது என எண்ணி தனது அரண்மனை சமையல் செய்பவரை அழைத்து, ஆயிரம் அந்தணர்களுக்கு உணவு தயார் செய்யுமாறு உத்தரவிட்டார். அளவு அதிகம் என்பதால் வெளிப்புறத்தில் உணவு செய்யத் துவங்கினார், சமையல் செய்பவர். அப்போது, விஷம் பாம்பு ஒன்றை பருந்து தனது காலால் அழுத்திப் பிடித்து. கொண்டு, உணவு தயார் செய்யும் வழியாக பறந்தது. வலி மிகுதியாய் இருந்த காரணத்தால் பாம்பு விஷத்தை உமிழ்ந்து. உமிழ்ந்த விஷமானது உணவில் விழுந்து நஞ்சானது. அந்த உணவு அந்தணர் யாவர்க்கும் பரிமாறப்பட்டது. உணவில் நஞ்சு கலந்த இருப்பதை அறியாத அந்தணர்கள் ஆயிரம் பேர் உயிர் பிரிந்தார்கள். சில நாட்கள் உருண்டோடின, பசியில் நலிவுற்று வந்த ஒரு அந்தணர் ஆடு மேய்க்கும் ஒரு மூதாட்டியிடம் குடிக்க நீர், உண்ண உணவு கிட்டுமா என்று வினாவினார். மூதாட்டியோ, என்னிடம் உணவு இல்லை. வேண்டும் என்றால் அங்கிருக்கும் அரண்மனைக்கு செல்லுங்கள். அங்கு உணவளிக்க வாய்ப்புள்ளது என்றார். ஆனால் அதில் நஞ்சு கலந்து உங்களை கொ
பிழைகளை அணுகுதல் (Approaching Mistakes)
குற்றங்காணுதலின் (Finding Mistakes) தொடர்பதிவே இது!
பிழைகளை கண்டறிந்தபிறகு அதை திருத்திக்கொள்ள முன்னெடுக்கும் தங்களது செயல் பாராட்டிற்கு உரியது.
சரியென தவறென இவ்வுலகில் எந்தக்கோட்பாடுகளும் இல்லை, சூழ்நிலைகளைப்பொறுத்தே அவை அமையும். செய்த செயல் யார்க்கும் தீங்குவிளைவிக்காமல் யாரையும் புண்படுத்தாமல் இருப்பின் செய்த செயல் சரியே.
பிழையை அணுகும் முறை:
இவைமீறியும் ஏதேனும் பிழை இழைத்திருந்தால், இழைத்த பிழைகளை நினைத்து அங்கேயே நின்றுவிடாமல், அதை சீர்செய்ய முனைவது சிறந்த வழி.
தாங்கள் செய்த செயலின் நோக்கம் சரியென இருந்தும், யார்க்கும் தீங்கு விளையாத போதும், செய்த செயல் "குற்றம்" என, அறியாதோர் பழியுரைத்தால் கண்டுகொள்ளாது, சினம்கொள்ளாது கடந்து செல்வது உயர்ந்தோர் பண்பு.
தாம் செய்த செயலில் பிறர் குற்றம்கண்டால், சினம்கொள்ளாது அதன் உண்மைத்துவத்தை ஆராய்ந்து தவறை அணுகுவதே முறையாகும்.
திருக்குறள் ௪௨௩ (423):
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
காரணம் கண்டறிதல்:
ஒரு பிழை நிகழ்ந்துவிட்டால், நிகழந்ததை நினைத்து வருத்தம் மட்டும் கொள்ளாமல் அது நிகழ்ந்த காரணிகளை (Cause Factor) கண்டறிந்து அதை எதிர்காலத்தில் நிகழா வண்ணம் காத்தல் வேண்டும். செய்த பிழையை ஒப்புக்கொள்ள தயங்குபவர்கள் அதை செய்யாது இருப்பது சிறப்பு. செய்த பிழையை தவறென தெரிந்தபிறகு ஒப்புக்கொள்ளுதலே, நல்வழிப்படுதலின் வெளிப்பாடு.
பிழையை, பிழையென தான் கண்டறிந்த பிறகும் அதை சரியென வாதிடுவது நம்மை நாம் சீர்செய்து கொள்ளும் பாதையிலிருந்து விளக்கிக்கொள்வதற்கு ஒப்பானது.
"ஆன்றோர் சான்றோரை உருவாக்கியது பிழைகளே!"
பிழைகள் வளர்ச்சிற்கு:
"பிழைகளை செய்யாதோர் ஏதும் புதிதாக முயற்சி செய்யவில்லை" என்பதே பொருள்.
பிழைகளை செய்து, அதனை திருத்திக்கொண்டே வாழ்வில் வளர்ச்சியடைகின்றோம். பிழைகளை பிழை எனக்கருத்தாமல் அதிலிருந்து எவ்வாறு கற்று மேம்படுத்திக்கொள்வது என ஆய்க.
நீங்கள் செய்த தவறை மறுமுறை இளைக்கையில், அது தெரியாமல் செய்ததாக ஒப்புக்கொள்ளப்படாது அது நீங்கள் எடுத்த முடிவாகவே இருக்கும். இதிலிருந்து ஒவ்வொரு தவறிலும் கற்றுக்கொள்ளுதலின் அவசியம் அறிகிறோம்.
"களவையும் கற்று மற!"
பிழைகளை செய்ய வழியுறுத்தப்படவில்லை, நிகழ்ந்தால் அதை உங்கள் மேம்பாட்டிற்கு பயன்படுத்திக்கொள்ள முனையச்செய்கிறேன், இங்கணம் ஆனூர் பிரதீப்.
Share to friends via WhatsApp
<முந்தைய பதிவு அடுத்த பதிவு >
பக்கத்தில் பதியப்படும் செய்திகளை Notification ஆகப்பெற
Popular posts from this blog
வாழ்வில் முன்னேற காதுகளை திறந்து வைத்திருந்தாலே போதுமானது ஆகும். ஏனெனில் , நம் குற்றம் நாம் ஆராய்கிறோமோ இல்லையோ அடுத்தவரால் ஆராயப்படும் , பலர்கூட சபையில் அரங்கேறும். அவர்களை கண்டுகொள்ளாது , அவர் கலைந்த குற்றத்தை செவிமடுத்து ஆராய்ந்து தவறெனில் திருதிக்கொள்க. அவ்வாறு தவறில்லாத செயல்கள் செய்திருப்பின் அதை அவர்களிடத்து செய்தது சரி என விளக்காது விலகி நிற்பது சிறப்பு. திருக்குறள் - ௧௮௬ (186): பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந் திறன்தெரிந்து கூறப் படும். செய்யும் செயலில் சரி தவறு என்பதை ஆய்க . நம் செயலில் பிறர்க்கு துன்பம் இளையாது தமக்கும் தம்மை சார்ந்தோர்க்கும் இன்பம் பயக்கும் எவ்வித செயலும் சரியே. சரி தவறு என்பது சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் அமையும். நம்மிடத்து ஏதேனும் குற்றம் அறியப்படுமாயின் அதை அக்கணமே சீர் செய்க. படகில் விழும் சிறு துளையானது படகை சாய்க்க வல்லது. நம்மிடத்து ஏற்படும் பிழைகளை கவனிக்க நாள்தோறும் நாட்குறிபேடு எழுதத்துவங்குங்கள் , வார இறுதியில் ஒருமுறை படிக்க சரி எது தவறு எது என நம்மை நமக்கு சுட்டிக்காட்டும். நாட்கள் செல்ல நிகழ்விலே சரி த
நம் வாழ்வில் எதுவும் எளிதில் உடனே கிட்ட ஆசைப்படுகிறோம். நம் ஆவல்கொண்ட தருணத்திற்கும் நமக்கும் இடைபட்டு நேரம் ஒன்று இல்லாதிருக்க ஆவல்கொள்வோம். அவ்வாறு நிகழ்ந்தால் அதன் அருமை, முக்கியத்துவம், சிறப்பு புரியாமலே போய்விடும். காத்திருத்தலே கிடைக்கப்பெறுதலின் வழி. பிஞ்சிலே பழுக்கும் பழமானது ஊட்டச்சத்து முழுமை அடையாமல் சுவை ஏதும் சிறக்காமல் பார்ப்பதற்கு கிட்டியதைப்போல் தோன்றினாலும் அதன் உண்மை சுவை மற்றும் பலன் கிட்டாது. அதே போல் தங்களுக்கு வேண்டியதை தக்ககாலம் வரை பொறுத்திருந்து காலம் கனிய கிடைக்குமாயின் அதன் சுவை சிறப்பாக இருக்கும். காத்திருக்கும் காலத்தில் வேண்டுவதின் முக்கியத்துவம், அதன் தேவை, அதன் மீதுள்ள பற்று, மோகம், முக்கியத்துவம், சிறப்பு அனைத்தும் புலப்படும். காத்திருக்கும் வேளையில் அனுபவிக்கும் உணர்வைக்காட்டிலும் கிட்டும் போது கிடைக்கும் இன்பம் அலாதியானது. "தங்களுக்கான பரிசை மூட்டையில் கட்டிக்கொண்டு வர தாமதமாகலாம்" ஆசையின் விளைவால் ஒன்றை பெற முயல்வோம், அது உண்மையில் நமக்கு தேவைதானா என்பதை அறிய காலம் எடுத்துரைக்கும். தமக்கு சற்றும் உதவாத வெறும் ஆசையின்
கதையை நன்கு படித்துவிட்டு நீதி வழங்குமாறு வேண்டுகிறேன்! வழங்கிய நீதி சரியா என்பதையும் சரிபார்த்து கொள்வோம்! ஒரு ஊரில் ஒரு அரசர் அந்தணர்கள் யாரும் பசியில் வாடக்கூடாது என எண்ணி தனது அரண்மனை சமையல் செய்பவரை அழைத்து, ஆயிரம் அந்தணர்களுக்கு உணவு தயார் செய்யுமாறு உத்தரவிட்டார். அளவு அதிகம் என்பதால் வெளிப்புறத்தில் உணவு செய்யத் துவங்கினார், சமையல் செய்பவர். அப்போது, விஷம் பாம்பு ஒன்றை பருந்து தனது காலால் அழுத்திப் பிடித்து. கொண்டு, உணவு தயார் செய்யும் வழியாக பறந்தது. வலி மிகுதியாய் இருந்த காரணத்தால் பாம்பு விஷத்தை உமிழ்ந்து. உமிழ்ந்த விஷமானது உணவில் விழுந்து நஞ்சானது. அந்த உணவு அந்தணர் யாவர்க்கும் பரிமாறப்பட்டது. உணவில் நஞ்சு கலந்த இருப்பதை அறியாத அந்தணர்கள் ஆயிரம் பேர் உயிர் பிரிந்தார்கள். சில நாட்கள் உருண்டோடின, பசியில் நலிவுற்று வந்த ஒரு அந்தணர் ஆடு மேய்க்கும் ஒரு மூதாட்டியிடம் குடிக்க நீர், உண்ண உணவு கிட்டுமா என்று வினாவினார். மூதாட்டியோ, என்னிடம் உணவு இல்லை. வேண்டும் என்றால் அங்கிருக்கும் அரண்மனைக்கு செல்லுங்கள். அங்கு உணவளிக்க வாய்ப்புள்ளது என்றார். ஆனால் அதில் நஞ்சு கலந்து உங்களை கொ
Comments
Post a Comment