Posts

Showing posts with the label நேரம்

[நீதிக்கதை] அந்தணர்கள் நஞ்சுண்ட கதை

கதையை நன்கு படித்துவிட்டு நீதி வழங்குமாறு வேண்டுகிறேன்! வழங்கிய நீதி சரியா என்பதையும் சரிபார்த்து கொள்வோம்! ஒரு ஊரில் ஒரு அரசர் அந்தணர்கள் யாரும் பசியில் வாடக்கூடாது என எண்ணி தனது அரண்மனை சமையல் செய்பவரை அழைத்து, ஆயிரம் அந்தணர்களுக்கு உணவு தயார் செய்யுமாறு உத்தரவிட்டார்.  அளவு அதிகம் என்பதால் வெளிப்புறத்தில் உணவு செய்யத் துவங்கினார், சமையல் செய்பவர். அப்போது, விஷம் பாம்பு ஒன்றை பருந்து தனது காலால் அழுத்திப் பிடித்து. கொண்டு, உணவு தயார் செய்யும் வழியாக பறந்தது.  வலி மிகுதியாய் இருந்த காரணத்தால் பாம்பு விஷத்தை உமிழ்ந்து. உமிழ்ந்த விஷமானது உணவில் விழுந்து நஞ்சானது. அந்த உணவு அந்தணர் யாவர்க்கும் பரிமாறப்பட்டது. உணவில் நஞ்சு கலந்த இருப்பதை அறியாத அந்தணர்கள் ஆயிரம் பேர் உயிர் பிரிந்தார்கள்.  சில நாட்கள் உருண்டோடின, பசியில் நலிவுற்று வந்த ஒரு அந்தணர் ஆடு மேய்க்கும் ஒரு மூதாட்டியிடம் குடிக்க நீர், உண்ண உணவு கிட்டுமா என்று வினாவினார். மூதாட்டியோ, என்னிடம் உணவு இல்லை. வேண்டும் என்றால் அங்கிருக்கும் அரண்மனைக்கு செல்லுங்கள். அங்கு உணவளிக்க வாய்ப்புள்ளது என்றார்.  ஆனால் அதில் நஞ்...

மரியாதையை சம்பாதிக்க! (How to earn respect)

Image
ஆனூர் பிரதீப் வலைப்பதிவின் மரியாதைகலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மரியாதை என்பது கேட்டுப்பெருவதல்ல, தாம் ஆற்றும் செயலின் வெளிப்பாடே ஆகும். தமக்கு உலகத்தாரிடம் மதிப்பும் மரியாதையும் தளர்ந்தால் கீழ் கூறியவை தங்களுக்கு உதவும் என நன்புகிறேன். பிறரை மதித்தல்  நேர்மை  செயலாற்றும் வல்லமை  நேரம்  பொறுப்பேற்றுக்கொள்ளுதல்  உதவி செய்தல்  பிறரை ஊக்குவித்தல்  முகமலர்ச்சி பிறரை மதித்தல்: “இந்த உலகிற்க்கு என்ன பரிசளிக்கிறோமோ அதுவே இருமடங்காகி தம்மை அடையும்”  தமக்கு மதிப்புகிட்ட வேண்டும் என்ற ஆவல் போல் இவ்வுலகக்தாரிடமும் அவ்வெண்ணம் நிறைந்திருக்கும், தங்களை பிறர் எவ்வாறு மதிக்க வேண்டும் என விரும்புகிறீர்களோ அவ்வாறே அவர்களை மதியுங்கள். மதிப்பதில், உயர்ந்தோர் தாழ்ந்தோர்; பெரியவர் சிறியவர் என எவ்வித பாகுபாடும் இல்லாதிருப்பது சிறப்பு. “மதிப்பவன் மிதிவதில்லை!”  தனித்துவம்: நம் அனைவரும் தனித்துவம் மிக்கவர்கள், உங்களின் தனித்துவமே உங்களை யார் என்பதை உலகிற்க்கு எடுத்துக்கூறும். தனித்துவத்தை கண்டறிந்து உலகிற்க்கு உங்களை அடையாளப் படுத்...

நேரம் நிறைவேற்றும் (Time will Fulfil) 🎖

Image
நம் வாழ்வில் எதுவும் எளிதில் உடனே கிட்ட ஆசைப்படுகிறோம். நம் ஆவல்கொண்ட தருணத்திற்கும் நமக்கும் இடைபட்டு நேரம் ஒன்று இல்லாதிருக்க ஆவல்கொள்வோம். அவ்வாறு நிகழ்ந்தால் அதன் அருமை, முக்கியத்துவம், சிறப்பு புரியாமலே போய்விடும். காத்திருத்தலே கிடைக்கப்பெறுதலின் வழி. பிஞ்சிலே பழுக்கும் பழமானது  ஊட்டச்சத்து முழுமை அடையாமல் சுவை ஏதும் சிறக்காமல் பார்ப்பதற்கு கிட்டியதைப்போல் தோன்றினாலும் அதன் உண்மை சுவை மற்றும் பலன் கிட்டாது. அதே போல் தங்களுக்கு வேண்டியதை தக்ககாலம் வரை பொறுத்திருந்து காலம் கனிய கிடைக்குமாயின் அதன் சுவை சிறப்பாக இருக்கும். காத்திருக்கும் காலத்தில் வேண்டுவதின் முக்கியத்துவம், அதன் தேவை, அதன் மீதுள்ள பற்று, மோகம், முக்கியத்துவம், சிறப்பு அனைத்தும் புலப்படும். காத்திருக்கும் வேளையில் அனுபவிக்கும் உணர்வைக்காட்டிலும் கிட்டும் போது கிடைக்கும் இன்பம் அலாதியானது. "தங்களுக்கான பரிசை மூட்டையில் கட்டிக்கொண்டு வர தாமதமாகலாம்" ஆசையின் விளைவால் ஒன்றை பெற முயல்வோம், அது உண்மையில் நமக்கு தேவைதானா என்பதை அறிய காலம் எடுத்துரைக்கும். த...

ஜீயோ தரவும் (Jio Data) வாழ்க்கை முன்னேற்றமும்

இது ஜீயோ பற்றிய விளம்பரமல்ல! நாளொன்றிற்கு 1.5ஜிபை, உபயோகப்படுத்தினாலும் இல்லாவிட்டாலும் அந்த இரவு அனைத்தும் அழிக்கப்பட்டு அடுத்த நாள் 1.5ஜிபை கிடைக்கும் என்பது திண்ணம். இவ்வாறு கால அவகாசம் முடியும்வரை நீடிக்கும். அதுபோன்றே வாழ்கை, உங்களுக்கு ஒவ்வொறு நாளும் 24 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. உபயோகப்படுத்தினாலும் இல்லாவிட்டாலும் அனைத்தும் அழிக்கப்பட்டு மறுநாள் தோன்றும். இவ்வாறு கூற்றுவோன் வரும் வரை நீளும். கூற்றுவோன் வரும் நாள் பெட்டகத்தில் ரகசியம் காக்கப்பட்டுள்ளது. ஒருவர் நேரத்தை எவ்வாறு உன்னதமாக உபயோகிக்கிறார் என்பதே அவரின் வாழ்கையில் உயர வழிவகுக்கும். இருக்கும் நேரத்தை சரியாக உபயோகப்படுத்தி வாழ்வில் சிறந்த நிலையடைய வாழ்த்துக்களுடன் நான் உங்கள் ஆனூர் பிரதீப். முந்தைய பதிவு                                                                                    அடுத்த பதிவு ...
வாசகர்களுக்கு அன்பான வேண்டுகோள்! பதிவுகளில் கருத்துத் தெரிவிக்கும் முன் தங்களது பெயர் அல்லது கூகிள் கணக்கை கொண்டு கருத்து பதிவு செய்யவும்.
பதிவில் கருத்து தெரிவித்த பிறகு, "Spam Filtration"க்கு உட்பட்ட பிறகே கருத்து பக்கத்தில் பதியப்படும்.