[நீதிக்கதை] அந்தணர்கள் நஞ்சுண்ட கதை

கதையை நன்கு படித்துவிட்டு நீதி வழங்குமாறு வேண்டுகிறேன்! வழங்கிய நீதி சரியா என்பதையும் சரிபார்த்து கொள்வோம்! ஒரு ஊரில் ஒரு அரசர் அந்தணர்கள் யாரும் பசியில் வாடக்கூடாது என எண்ணி தனது அரண்மனை சமையல் செய்பவரை அழைத்து, ஆயிரம் அந்தணர்களுக்கு உணவு தயார் செய்யுமாறு உத்தரவிட்டார்.  அளவு அதிகம் என்பதால் வெளிப்புறத்தில் உணவு செய்யத் துவங்கினார், சமையல் செய்பவர். அப்போது, விஷம் பாம்பு ஒன்றை பருந்து தனது காலால் அழுத்திப் பிடித்து. கொண்டு, உணவு தயார் செய்யும் வழியாக பறந்தது.  வலி மிகுதியாய் இருந்த காரணத்தால் பாம்பு விஷத்தை உமிழ்ந்து. உமிழ்ந்த விஷமானது உணவில் விழுந்து நஞ்சானது. அந்த உணவு அந்தணர் யாவர்க்கும் பரிமாறப்பட்டது. உணவில் நஞ்சு கலந்த இருப்பதை அறியாத அந்தணர்கள் ஆயிரம் பேர் உயிர் பிரிந்தார்கள்.  சில நாட்கள் உருண்டோடின, பசியில் நலிவுற்று வந்த ஒரு அந்தணர் ஆடு மேய்க்கும் ஒரு மூதாட்டியிடம் குடிக்க நீர், உண்ண உணவு கிட்டுமா என்று வினாவினார். மூதாட்டியோ, என்னிடம் உணவு இல்லை. வேண்டும் என்றால் அங்கிருக்கும் அரண்மனைக்கு செல்லுங்கள். அங்கு உணவளிக்க வாய்ப்புள்ளது என்றார்.  ஆனால் அதில் நஞ்சு கலந்து உங்களை கொ

புது வருடத் தீர்மானம் - New Year 🎖

"அடுத்தவரின் இலை பார்த்து பசி ஆருதல் சிரமம். "

அண்மையில் இருப்பவர்கள் புத்தாண்டிர்க்கு தீர்மானம் (Resolution) எடுப்பதை கேட்டிருப்பீர்கள். நாமும் எடுப்போம் என எடுக்காமல், நாம் எடுக்கும் தீர்மானத்தின் விளைவு நம் வாழ்க்கையில் என்ன திருப்பத்தை கொண்டுவர உள்ளது என்பதை நன்கு ஆராய்ந்து முடிவெடுங்கள்.

சென்ற ஆண்டு நாம் தீர்மானம் எடுத்திருப்போம் அதை முடித்திருந்தால் சிறப்பு, முடிக்க முடியாமல் விடப்படிருந்தால் அதன் காரணம் நோக்குங்கள். மறுபடியும் நேரா வண்ணம் பார்த்துக்கொள்ளுங்கள்.

வாழ்க்கை என்பதே பிழைகளும் திருதிக்கொள்ளுதலும் தானே!

எடுக்கும் தீர்மானம் வெற்றிகரமாக முடிய எவ்வளவு கால அவகாசம் தேவைப்படும் என்பதை கருத்தில் கொள்க. எதற்க்கு முக்கியத்துவம் அதிகம் என்று ஆய்க, பின்பு முன்னுரிமை கொடுத்து சிறப்பான திட்டதோடு செயல்படுத்ததுவங்குங்கள். 

ஒரு சின்ன நல்ல முடிவு நம் வாழ்க்கையில் சிறந்த இடத்திற்கு வழி வகுக்கும். (விளக்கம்: பட்டாம்பூச்சியே ஆழிப்பேரலைக்கு காரணம் காண்க! )

எடுக்கும் தீர்மானத்தை இன்றிலிருந்து செய்ய துவங்க ஆரம்பியுங்கள். இன்றை விட சிறந்த நாள் என்றும் இல்லை என்ற எண்ணத்தோடு.
மனதை புதுப்பித்துக்கொண்டே இருங்கள்.

நல்ல செயல்களை நம் புத்தாண்டில் தான் ஆரம்பிக்க விரும்புவோம்.
புத்தாண்டு - நல்ல துவக்கம் - நல்ல செயல்கள் என்று.
நீங்கள் நினைப்பது போல ஒரே நாளில் அனைத்தும் மறிவிடப் போறதில்லை என்பதே உண்மை. அதை விடாமுயற்சி தன்னம்பிக்கை மூலமாக அடையலாம். சிறுக சிறுக சேரவே மழை நீரும் கடலாகும்.

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது 
தூக்கம் கடிந்து செயல்

எளிதில் ஏற்றிய தீர்மானத்தை சற்று உழைப்பை சேர்த்து உருவாக்குங்கள், நீங்கள் மனதில் கட்டிய கோட்டையை, நிகழ்வில்.

தேர்ச்சி பெறுதல், நல்ல பழக்கம் பழகுதல், தீய பழக்கம் விடுதல், செல்வம் சேர்த்தல், வீடு கட்டுதல், அலுவலகத்தில் நன்மதிப்பு பெறுதல், ஏழைகளுக்கு உதவுதல், யோகா, மூச்சுப்பயிற்சி, உடல் மெளித்தல் அல்லது உடல் பெறுதல் போன்றவையே நம்மிடத்தில் பெரும்பாலும் தீர்மானமாக இருக்கும்.

நமது அரசு ஆங்கிலப் புத்தாண்டு முதல் நெகிழிப்பைகளை (Polythene Bags/Cover) உபயோகிக்கமாட்டோம் என்று எடுத்த தீர்மானத்தை நாமும் கடைபிடிப்போம்.

புத்தாண்டை மகிழ்ச்சியுடன் அணுகுங்கள். என்றும் மகிழ்ச்சி பொங்க நோய் நொடி இல்லாமல் வெற்றிகளை சுவைக்க புத்தாண்டு வாழ்த்துக்களுடன் நான் உங்கள் ஆனூர் பிரதீப்.


Share this article via WhatsApp





முந்தைய பதிவு                                                                                   அடுத்த பதிவு
பக்கத்தில் பதியப்படும் செய்திகளை Notification ஆகப்பெற

Comments

  1. 👌 வாழ்த்துக்கள் நல்ல முயற்சி.. நல்ல சிந்தனை

    ReplyDelete
    Replies
    1. நன்றி மதன் குப்தன், நல்வாக்கிற்க்கு. வலைப்பதிவில் இணைந்திருங்கள் மேலும் பதிவிற்க்கு..

      Delete

Post a Comment

வாசகர்களுக்கு அன்பான வேண்டுகோள்! பதிவுகளில் கருத்துத் தெரிவிக்கும் முன் தங்களது பெயர் அல்லது கூகிள் கணக்கை கொண்டு கருத்து பதிவு செய்யவும்.
பதிவில் கருத்து தெரிவித்த பிறகு, "Spam Filtration"க்கு உட்பட்ட பிறகே கருத்து பக்கத்தில் பதியப்படும்.

Popular posts from this blog

குற்றங்காணுதல் (Finding Mistakes) 🎖

நேரம் நிறைவேற்றும் (Time will Fulfil) 🎖

[நீதிக்கதை] அந்தணர்கள் நஞ்சுண்ட கதை