[நீதிக்கதை] அந்தணர்கள் நஞ்சுண்ட கதை

கதையை நன்கு படித்துவிட்டு நீதி வழங்குமாறு வேண்டுகிறேன்! வழங்கிய நீதி சரியா என்பதையும் சரிபார்த்து கொள்வோம்! ஒரு ஊரில் ஒரு அரசர் அந்தணர்கள் யாரும் பசியில் வாடக்கூடாது என எண்ணி தனது அரண்மனை சமையல் செய்பவரை அழைத்து, ஆயிரம் அந்தணர்களுக்கு உணவு தயார் செய்யுமாறு உத்தரவிட்டார்.  அளவு அதிகம் என்பதால் வெளிப்புறத்தில் உணவு செய்யத் துவங்கினார், சமையல் செய்பவர். அப்போது, விஷம் பாம்பு ஒன்றை பருந்து தனது காலால் அழுத்திப் பிடித்து. கொண்டு, உணவு தயார் செய்யும் வழியாக பறந்தது.  வலி மிகுதியாய் இருந்த காரணத்தால் பாம்பு விஷத்தை உமிழ்ந்து. உமிழ்ந்த விஷமானது உணவில் விழுந்து நஞ்சானது. அந்த உணவு அந்தணர் யாவர்க்கும் பரிமாறப்பட்டது. உணவில் நஞ்சு கலந்த இருப்பதை அறியாத அந்தணர்கள் ஆயிரம் பேர் உயிர் பிரிந்தார்கள்.  சில நாட்கள் உருண்டோடின, பசியில் நலிவுற்று வந்த ஒரு அந்தணர் ஆடு மேய்க்கும் ஒரு மூதாட்டியிடம் குடிக்க நீர், உண்ண உணவு கிட்டுமா என்று வினாவினார். மூதாட்டியோ, என்னிடம் உணவு இல்லை. வேண்டும் என்றால் அங்கிருக்கும் அரண்மனைக்கு செல்லுங்கள். அங்கு உணவளிக்க வாய்ப்புள்ளது என்றார்.  ஆனால் அதில் நஞ்சு கலந்து உங்களை கொ

உடைப்பவரா? உருவாக்குக்குபவரா?

மதிக்கருக்கும் மதியவேளையில் சுட்டெரிக்கும் சூரியக்கதிர்கள் அஹமதாபாத் அருகே, கல்லுடைக்கும் குழுவிடம் கேட்டார் ஒரு பெண்மணி...

"என்ன செய்கிறீர்கள்?" என்று...

பதிலோ வேலையாளிடமிருந்து, "கல்லுடைக்கிறேன்..!"

சற்று தள்ளி சென்று மற்றோருவருடன் விசாரிக்க.. அவர் சொன்ன பதில் மலைத்துப்போக வைத்தது.

"என்ன செய்கிறீர்கள்?", பெண்மணி.

"உலகில் மிகப்பெரிய சிலையாய் 600 அடியில் சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் சிலை நிறுவப்படவுள்ளது, அது உருவாவதற்கு வேலைசெய்து கொண்டிருக்கிறேன்." என்றார்.

கேள்வி ஒன்றுதான், செய்த தொழில் ஒன்றுதான், பதில் வேறுபட்டு நிற்கிறது.

சாதிக்கப்பிறந்த சாதனையாளர்களே, உங்களை யாரேனும் என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்றுகேட்டால் "நாட்டின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டுக்கொண்டிருக்கிறேன்" என்று கூறுங்கள்.

எண்ணம் மாறினால் எல்லாமும் மாறும்.


முந்தைய பதிவு                                                                                   அடுத்த பதிவு
பக்கத்தில் பதியப்படும் செய்திகளை Notification ஆகப்பெற

Comments

  1. Replies
    1. மாற்றம் ஒன்று தான் மாறாமல் நிலைநிற்பது. நீங்கள் ஒப்புக்கொள்ளும் ஒவ்வொரு விடையமும் (விஷயமும்) நீங்கள் அதன் வழி செல்கிறீர்கள் என்பதை உறுதியளிக்கும்.

      Delete

Post a Comment

வாசகர்களுக்கு அன்பான வேண்டுகோள்! பதிவுகளில் கருத்துத் தெரிவிக்கும் முன் தங்களது பெயர் அல்லது கூகிள் கணக்கை கொண்டு கருத்து பதிவு செய்யவும்.
பதிவில் கருத்து தெரிவித்த பிறகு, "Spam Filtration"க்கு உட்பட்ட பிறகே கருத்து பக்கத்தில் பதியப்படும்.

Popular posts from this blog

குற்றங்காணுதல் (Finding Mistakes) 🎖

நேரம் நிறைவேற்றும் (Time will Fulfil) 🎖

[நீதிக்கதை] அந்தணர்கள் நஞ்சுண்ட கதை